
முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை
10.04.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும் காமராசர் கலை இலக்கியக்கழகமும் இணைந்து முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணாக்கர்கள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. இரண்டாம் ஆண்டு மாணவி கு. அஸ்வதி ராதா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவி முனைவர் க. திலகவதி அவர்கள் முன்னாள் மாணாக்கர்களை வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை இந்நாள் 95 மாணாக்கர்களோடு, முன்னாள் மாணவர் செ. ஹரி சங்கர் கலந்துரையாடினர்.
கல்லூரியில் தாங்கள் படித்த போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தங்களது தற்போதைய வாழ்வையும் எடுத்துரைத்தனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ம.பாரதிகண்ணன், அ. ராஜ கப்பல் வீ. கனக லட்சுமி லி. பால லிங்ககனி ஆகியோர் முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவன் சோ. சோலை ராஜா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முழுவதுமாக முதலாம் ஆண்டு மாணவி ரியானி தொகுத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவடைந்தது.