Health Awareness Program
30.06.2025 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த் துறை,காமராசர் கலை இலக்கியக் கழகம் இணைந்து சிறப்பு விருந்தினர் விரிவுரை நிகழ்வை நடத்தினர். health awareness எனும் தலைப்பில் திருமதி த. சண்முகப் பிரபா,உதவிப்பேராசிரியர், உடற்கல்வித்துறை, காமராஜ் கல்லூரி, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடல் நல ஆரோக்கியம், ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் யோகா முறைகள், விளையாட்டு வழிமுறைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாணாக்கர்கள் தங்கள் ஐயங்களை சிறப்பு விருந்தினரிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.தமிழ்த்துறை மாணாக்கர்கள் பா.ஆனந்தகுமார், ஜா. ரியானி, சோ.சோலைராஜா ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைந்து நடத்தினர்.விழா இனிதே முடிந்தது.
