வெள்ள நிவாரண பணிகள் மற்றும் கள ஆய்வுகள் – NSS Units: 217, 241 & 244
கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், மற்றும் துணை முதல்வர் ஆலோசனையின் பேரில் வெள்ள இடர்பாடுகளினால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 30 மாணவர்கள் நிவாரண பணிகளையும் கள ஆய்வு மேற்கொண்டனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனை பேரில் ஊர் பொதுமக்கள் உடன் கலந்துரையாடி டிசம்பர் 2023 மழை வெள்ள பாதிப்புகளில் பாதிப்பு அடைந்த பொது மக்களின் வாழ்வாதாரம் சுகாதாரம் குடியிருப்பு பகுதியில் கட்டுமானம் , நீர் வழித்தடம், குளக்கரை பாதைகள் , ஏற்பட்ட சேதங்கள், குறித்து புள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி நடைபெற்றது. நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் முறையே முனைவர். கு.ஆனந்தராஜ் (NSS UNIT : 217), திருமதி. M. சந்திரா (NSS UNIT: 241) மற்றும் திருமதி K. இந்திரா.(NSS UNIT: 244) தலைமையில் மூன்று மாணவ குழுவினர் உடன்குடி, வெள்ளாரன்விளை மற்றும் பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் பணிகளை மேற்கொண்டனர்.
