கலை இலக்கியத் திருவிழா – தமிழ்த்துறை
21.9.24 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு ) மற்றும் தீந்தமிழ் கலை இலக்கியக் கழகமும் இணைந்து கலை இலக்கியத் திருவிழாவினை நடத்தினர். கல்லூரிகளுக்கு இடையான மூன்று விதமான போட்டிகள் நடைபெற்றன .நடனப் போட்டி ,வினாடி வினா போட்டி ,பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இதில் பிற கல்லூரிகளைச் சேர்ந்த 287 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு ,தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மாணாக்கர்கள் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .மேலும் அதிக வெற்றி பெற்ற கல்லூரிகளுக்குக் கேடயம் வழங்கப்பட்டன.
