முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை
16.08.2023 காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணாக்கர்கள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. இரண்டாம் ஆண்டு மாணவன் அ.நந்த குமார் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி முன்னாள் மாணாக்கர்களை வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை இந்நாள் மாணாக்கர்களோடு, முன்னாள் மாணாக்கர்கள் கலந்துரையாடினர்.கல்லூரியில் தாங்கள் படித்த போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தங்களது தற்போதைய வாழ்வையும் எடுத்துரைத்தனர். தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னாள் மாணவர்கள் மகேஷ் குமார்,ஹரிசங்கர்,மகேந்திரன் ஆகியோர் முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர் ஜ. பூங்கொடி, துணை முதல்வர் முனைவர் அ.அருணாசல ராஜன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தனர். நாட்டுப்பண்ணோடு நிகழ்வு நிறைவடைந்தது.
