Back
Home Events பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு – தமிழ்த்துறை

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு – தமிழ்த்துறை

21.07.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு) சார்பாக பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது. இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவ, மாணவியர்கள் 70 பேர் அவர்களது பெற்றோர்களோடு கலந்து கொண்டனர். மாணவர்களின் வருகைப்பதிவு குறித்தும், பருவத்தேர்வு முடிவுகள் குறித்தும்,தேர்ச்சி விகிதம், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. திலகவதி, தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முனைவர் சு.இராஜலெட்சுமி, முனைவர் ஜெ.ராஜசெல்வி, திருமதி அ.எமிமா ஆகியோர் பெற்றோர்களோடு கலந்துரையாடினர்.

Date
Jul 21 2023
Expired!
Time
9:00 am
Location
Bharathiyar Block

Leave A Reply