பறவைகளின் கணக்கெடுப்பு பணிகள் – UBA
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பறவைகளின் கணக்கெடுப்பு பணிகள் மார்ச் 9 ஆம் தேதி துவங்கியது. மாவட்ட வன இலாகா அதிகாரிகள் தலைமையில் பல்வேறு நீர் வள ஆதார அமைப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் காமராஜ் கல்லூரி விலங்கியல் துறை மாணவ மாணவிகள் ஆர்வமுடன் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் A. அசோக் மற்றும் துணை முதல்வர் முனைவர் K. பானுமதி, விலங்கியல் துறை தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி, கல்லூரியின் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ .நாகராஜன், விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ஒருங்கிணைப்பில், விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் உடன் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.
