முன்னாள் மாணவர் சிறப்புரை நிகழ்வு – தமிழ்த்துறை

03.10.24 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறையும் (சுயநிதிப்பிரிவு) காமராசர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து முன்னாள் மாணவர் சிறப்புரை நிகழ்வை நடத்தினர். முன்னாள் மாணவர் ச. பெருமாள் அவர்கள் திரை எழுத்தாளர் ,கவிஞர் மாணாக்கர்களுக்குத் திறன் மேம்பாட்டுக் கல்வி குறித்து சிறப்புரை ஆற்றினார் .மேலும் மாணாக்கர்கள் கலைத்திறன் அடிப்படையில் தங்களை வளர்த்துக் கொள்வது பற்றி ஊக்கம் அளித்தார் அதற்கான அறிவுரைகளை வழங்கினார் .முன்னாள் மாணவர் என்பதால் இக்கல்லூரியில் தனக்கான சிறந்த அனுபவத்தையும் மாணாக்கர்களோடு பகிர்ந்து கொண்டார். தமிழ்த்துறை மாணாக்கர்கள் கு.அஸ்வதி ராதா , ரா.அரவிந்த், மு.பரமேஸ்வரி, வெ.செல்வமஞ்சுளா ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினர். தமிழ்த்துறைத் தலைவர் ,பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply