கள ஆய்வு: வேளாண்மை கல்லூரி கிள்ளி குளம் – தமிழ்த்துறை

22.03.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் 52 பேர் கள ஆய்விற்காக வல்லநாடு அருகில் உள்ள கிள்ளி குளம் வேளாண்மை கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பேராசிரியர் கென்னடி அவர்கள் மூலிகைத் தொடர்பான கருத்துக்களை மாணவர்களோடு கலந்துரையாடினார். மாணவ, மாணவிகள் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் விவசாயப் பண்ணையையும், மூலிகைத் தோட்டத்தையும் நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் செல்வி, முனைவர் ராஜசெல்வி மற்றும் முனைவர் வசந்தி ஆகியோர் மாணவிகளை அழைத்து சென்றனர். இந்நிகழ்வை தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave A Reply